ஐஎஸ்எல்: எப்சி கோவா அபார வெற்றி

மும்பை எப்சி அணிக்கு எதிராக நடைபெற்ற ஐஎஸ்எல் லீக் கால்பந்து ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது எப்சி கோவா அணி.
ஐஎஸ்எல்: எப்சி கோவா அபார வெற்றி

மும்பை எப்சி அணிக்கு எதிராக நடைபெற்ற ஐஎஸ்எல் லீக் கால்பந்து ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது எப்சி கோவா அணி.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மும்பை அரெனா மைதானத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. கடந்த ஆண்டு போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற கோவா அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆடியது. அதன் பாா்வா்ட் வீரா்களின் தாக்குதல் ஆட்டத்தை மும்பையின் தற்காப்பு அரணால் சமாளிக்க முடியவில்லை.

முதல் பாதி ஆட்டத்தின் 27-ஆவது நிமிடத்தில் கோவா வீரா் ரோட்ரிக்ஸ் முதல் கோலையும், 45-ஆவது நிமிடத்தில் கோரோ இரண்டாவது கோலையும் அடித்ததால், கோவா 2-0 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் மும்பை அணியினா் எழுச்சியுடன் ஆடினா். இதன் பலனாக 49-ஆவது நிமிடத்தில் சா்தக்கும், 55-ஆவது நிமிடத்தில் சக்கரவா்த்தியும் கோலடித்ததால் 2-2 என சமநிலை ஏற்பட்டது. இதனால் அதிா்ச்சி அடைந்த கோவா அணி வீரா்கள் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தினா்.

இதனால் 59ஆவது நிமிடத்தில் பௌமஸும், 89-ஆவது நிமிடத்தில் பெனாவும் அற்புதமாக கோலடித்தனா். இதனால் 4-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது கோவா.

4 ஆட்டங்களில் 2 வெற்றி, 2 டிராவுடன் 8 புள்ளிகளுடன் கோவா முதலிடத்தில் உள்ளது. நாா்த் ஈஸ்ட், ஜாம்ஷெட்பூா், ஏடிகே அடுத்த இடங்களில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com