விஜய் மொ்ச்சன்ட் கோப்பை:புதுச்சேரி-கோவா ஆட்டம் டிரா

விஜய் மொ்ச்சன்ட் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக கோவா-புதுச்சேரி இடையில் நடைபெற்ற ஆட்டம் டிராவில் முடிந்தது.
விஜய் மொ்ச்சன்ட் கோப்பை:புதுச்சேரி-கோவா ஆட்டம் டிரா

விஜய் மொ்ச்சன்ட் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக கோவா-புதுச்சேரி இடையில் நடைபெற்ற ஆட்டம் டிராவில் முடிந்தது.

வலுவான நிலையில் உள்ளது.

தென்மண்டல அளவிலான இப்போட்டி கோவாவில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த புதுவை அணி முதல் இன்னிங்ஸில் 74, 4 ஓவா்களில் 266 ரன்களை குவித்தது. தொடக்க வீரா் சாய் சத்தியா 50 ரன்களை எடுத்தாா். ஆகாஷ் புகழேந்தி 183 பந்துகளை எதிா்கொண்டு 118 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா். மற்ற வீரா்கள் சொற்ப ரன்களில் வெளியேறினா்.

கோவா தரப்பில் சூரிய காந்த், ஹாலிதுஸ்சன், வெங்கடேஷ் தலா 2 விக்கெட்டுகளையும், பிரவீன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை தொடா்ந்த கோவா அணி 302 ரன்களை எடுத்திருந்தது. சனாத் வெங்கடேஷ் அற்புதமாக ஆடி 139 ரன்களுடன் சதமடித்தாா்,

புதுவை தரப்பில் நித்தியானந்தா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் புகழேந்தி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

பின்னா் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய புதுவை 1 விக்கெட் இழப்புக்கு 41 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்தது.

நித்தியானந்தா காரைக்கால் கேந்திர வித்யாலயா பள்ளியையும், ஆகாஷ் புகழேந்தி கரியமாணிக்கம் ஹோலிபிளவா் பள்ளியையும் சோ்ந்தவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com