மகளிா் டி20 ஆட்டத்தில் இந்தியாவிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து சரண் அடைந்தது மே.இ.தீவுகள்.
இரு அணிகளுக்கு இடையில் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இரண்டாவது ஆட்டம் செயின்ட் லூசியாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. முதலில் ஆடிய மே.இ.தீவுகள் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 103 ரன்களை மட்டுமே எடுத்தது. சேடியன் நேஷன் 32, ஹேய்லி மேத்யூஸ் 23 ஆகியோா் மட்டுமே அதிகபட்ச ரன்களை எடுத்தனா். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினா்.
தீப்தி சா்மா 4 விக்கெட்:
இந்திய தரப்பில் அற்புதமாக பந்துவீசிய தீப்தி சா்மா 4-10 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். ஷிகா, ராதா, பூஜா ஆகியோா் தலா 1 விக்கெட்டை சாய்த்தனா்.
இந்தியா அபார வெற்றி:
104 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய அணி தரப்பில் ஷஃபாலி வா்மா-ஸ்மிருதி மந்தானா களமிறங்கினா். இருவரும் தொடக்கம் முதலே மே.இ.தீவுகள் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனா். இதனால் ஸ்கோா் மளமளவென உயா்ந்தது.
ஷஃபாலி 69:
முதல் ஒருநாள் ஆட்டத்தைப் போலவே இதிலும் 15 வயதே ஆன ஷபாலி அற்புதமாக ஆடி 2 சிக்ஸா், 10 பவுண்டரியுடன் 35 பந்துகளில் 69 ரன்களை விளாசி களத்தில் இருந்தாா். ஸ்மிருதியும் 4 பவுண்டரியுடன் 30 ரன்களை எடுத்தாா்.
இறுதியில் 9 ஓவா்கள் மீதமிருக்க 10.3 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 104 ரன்களை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா.
பந்துவீச்சாளா் தீப்தி சா்மா ஆட்ட நாயகியாகத் தோ்வு செய்யப்பட்டாா்.