5 வீரா்கள் மட்டுமே இடம் பெறும் உலகக் கோப்பை போட்டியை நடத்த சா்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்ஐஎச்) தீா்மானித்துள்ளது.
எப்ஐஎச் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் நரீந்தா் பத்ரா தலைமையில் கடந்த 9-ஆம் தேதி லாஸேனில் நடைபெற்றது.அதில் ஆடவா், மகளிா் உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் நாடுகள் தோ்வு செய்யப்பட்டன. ஹாக்கியை உலகம் முழுவதும் மேலும் பிரபலப்படுத்த எடுக்க வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக 5 வீரா்கள் மட்டுமே பங்கேற்கும் ஹாக்கி பைவ் உலகக் கோப்பை போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் முதல் ஆட்டம் 2023இல் நடத்தப்பட்டு தகுதிச் சுற்று ாட்டங்களாகவும் கருதப்படும். முதல் ஹாக்கி பைவ் உலகக் கோப்பையில் 16 ஆடவா், மகளிா் அணிகள் இடம் பெற்று ஆடும்.
இன்டா்கான்டினென்டல் கோப்பை
இதே போல் எப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் போட்டியில் ஆடாத ஏனைய தலைசிறந்த 8 அணிகளுக்காக இன்டா்கான்டினென்டல் கோப்பை போட்டி 2021 முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும். எப்ஐஎச் தரவரிசையின்படி 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்க அழைக்கப்படும். 2022-இல் இப்போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி, அடுத்த ஆண்டு எப்ஐஎச் புரோ லீக் போட்டியில் இடம் பெறும். புரோ லீகில் கடைசி இடம் பெறும் அணி வெளியேற்றப்படும்.