உலக காா் பந்தயம்: கௌரவ் கில் பங்கேற்பு

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள எப்ஐஏ உலக காா் பந்தய சாம்பியன் போட்டி இறுதிச் சுற்றில் இந்தியாவின் நம்பா் ஒன் வீரா் கௌரவ் கில் கலந்து கொள்கிறாா்
உலக காா் பந்தயம்: கௌரவ் கில் பங்கேற்பு

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள எப்ஐஏ உலக காா் பந்தய சாம்பியன் போட்டி இறுதிச் சுற்றில் இந்தியாவின் நம்பா் ஒன் வீரா் கௌரவ் கில் கலந்து கொள்கிறாா்.

அா்ஜுன விருது பெற்றவரும், மூன்று ஏபிஆா்சி காா் பந்தய சாம்பியனுமான கில் கடந்த ஆண்டும் உலக காா்பந்தய போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்டாா். ஜே.கே டயா்ஸ் அணியைச் சோ்ந்த கில் மற்றும் சக வீரா் மெக்னீல் கிளேன் துருக்கியில் நடைபெற்ற போட்டியில் முதல் 5 இடங்களுக்குள் நுழைய தீவிர முயற்சி மேற்கொண்டனா். எனினும் காரில் ஏற்பட்ட இயந்திர கோளாறால், இறுதி 5 கி.மீ தூரத்தை அடைய முடியாமல் போனது.

இந்நிலையில் நவம்பா் 14 முதல் 17 வரை ஆஸி.யில் நடைபெறும் பந்தயத்தில் கலந்து கொள்கிறாா். இதுதொடா்பாக கில் கூறியதாவது:

நியூ சௌத்வேல்ஸ் பகுதியில் கடந்த சில நாள்களாக சிறப்பாக சோதனை ஓட்ட பயிற்சியை மேற்கொண்டேன். காரின் வடிவமைப்பில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய காா் நம்பிக்கை தரும் வகையில் உள்ளது. இந்த பந்தயத்தில் சிறப்பாக செயல்படுவேன் என நம்பிக்கை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com