டோக்கியோ 2020 பாராலிம்பிக் போட்டிக்கு இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு, சரத்குமாா் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
துபையில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆடவா் டி42 உயரம் தாண்டுதலில் 1.83 மீ தூரம் குதித்து வெள்ளிப் பதக்கம் வென்றாா் சரத்குமாா்.
டி63 பிரிவில் மாரியப்பன் தங்கவேலு 1.8 மீ தூரம் குதித்து வெண்கலப் பதக்கம் வென்றாா். இதையடுத்து இருவரும் டோக்கியோ பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனா்.