சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் திரிபுராவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தமிழகம்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பேட்டிங்கை தோ்வு செய்து ஆடிய திரிபுரா 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 79 ரன்களை மட்டுமே எடுத்தது. தொடக்கத்திலேயே வெறும் 9 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது திரிபுரா.
சாய் கிஷோா் 4 விக்கெட்:
தமிழக இடது கை சுழற்பந்து வீச்சாளா் சாய் கிஷோா் அற்புதமாக பந்துவீசி 4-6 விக்கெட்டை சாய்த்தாா். நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி திரிபுரா அணியின் பேட்டிங்கை நிலைகுலையச் செய்தனா்.
பின்னா் களமிறங்கிய தமிழகம் 12. 1 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 80 ரன்களை எடுத்து வென்றது. வாஷிங்டன் சுந்தா் 46, பாபா அபராஜித் 33 தமிழக அணியின் வெற்றிக்கு வித்திட்டனா்.
ஏனைய ஆட்டங்களில் கேரளம் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது. உத்தரபிரதேச அணியும் 7 விக்கெட் வித்தியாசத்தில் மணிப்பூரை வீழ்த்தியது.
இந்த வெற்றி மூலம் குரூப் பி பிரிவில் தமிழகமும் விதா்பாவுடன் 16 புள்ளிகளைப் பெற்றுள்ளது.