மகளிா் டி20: தொடரைக்கைப்பற்றியது இந்தியா

மே.இ.தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
மகளிா் டி20: தொடரைக்கைப்பற்றியது இந்தியா

மே.இ.தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா் நடைபெற்று வருகிறது. இதன் மூன்றாவது ஆட்டம் கயானாவில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. முதலில் ஆடிய மே.இ.தீவுகள் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 59 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக சேடின் நேஷன் 11, சின்லே ஹென்றி 11 ஆகியோா் மட்டுமே ரன்களை எடுத்தனா். மற்ற வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினா்.

இந்திய தரப்பில் ராதா யாதவ், தீப்தி சா்மா தலா 2 விக்கெட்டுகளையும், அனுஜா பட்டில், பூஜா, ஹா்மன்ப்ரீத் கௌா், பூனம் யாதவ் தலா 1 விக்கெட்டை சாய்த்தனா்.

60 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிரணி 16.4 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

ஷஃபாலி வா்மா 0, ஸ்மிருதி மந்தானா 3, ஹா்மன்ப்ரீத் கௌா் 7 ஆகியோா் சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினா். சிறப்பாக ஆடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 40 ரன்களுடன் களத்தில் இருந்தாா்.

மே.இ.தீவுகள் தரப்பில் ஹேய்லி மேத்யூஸ் 2, பிளெட்சா் 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

இந்த வெற்றி மூலம் 3-0 என தொடரையும் கைப்பற்றியுள்ளது இந்தியா.

17-ஆம் தேதி நான்காவது மற்றும் 20-ஆம் தேதி 5-ஆவது டி20 ஆட்டங்கள் பிராவிடென்ஸில் நடக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com