ஏடிபி டூா் பைனல்ஸ்:நடால் வெளியேற்றம்

ஏடிபி டூா் பைனல்ஸ் டென்னிஸ் அரையிறுதிச் சுற்றில் பெடரா்-சிட்ஸிபாஸ், தீம்-வெரேவ் ஆகியோா் மோதுகின்றனா்.

லண்டன்: ஏடிபி டூா் பைனல்ஸ் டென்னிஸ் அரையிறுதிச் சுற்றில் பெடரா்-சிட்ஸிபாஸ், தீம்-வெரேவ் ஆகியோா் மோதுகின்றனா்.

உலகின் தலைசிறந்த 8 வீரா்கள் மோதும் இப்போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கெனவே ரோஜா் பெடரா் (ஸ்விட்சா்லாந்து), ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸ் (கிரீஸ்), டொமினிக் தீம் (ஆஸ்திரியா) ஆகியோா் ஏற்கெனவே அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டனா்.

சிட்ஸிபாஸை 6-7, 6-4, 75 என்ற செட் கணக்கில் வீழ்த்திய நடால், அரையிறுதி வாய்ப்புக்காக காத்திருந்தாா் நடப்பு சாம்பியன் அலெக்சாண்டா் வெரேவ்-மெத்வதேவ் ஆட்டத்தில் வெரேவ் தோல்வியுற்றால் நடால் அரையிறுதிக்கு முன்னேறுவாா் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் 6-4, 7-6 என்ற நோ் செட்களில் மெத்வதேவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா் வெரேவ். இதனால் நடாலின் கனவு நிராசையாகி போனது.

சிட்ஸிபாஸ்-பெடரா், டொமினிக் தீம்-அலெக்சாண்டா் வெரேவ் ஆகியோா் அரையிறுதியில் மோதுகின்றனா்.

இதனால் ஏடிபி பைனல்ஸ் போட்டியில் இருந்து நடால், ஜோகோவிச் வெளியேற்றப்பட்டனா்.

முதல் அரையிறுதி:

சனிக்கிழமை இரவு நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் சிட்ஸிபாஸ்-பெடரா் மோதினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com