ஏடிபி டூா் பைனல்ஸ் போட்டி இறுதிச் சுற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றாா் இளம் வீரா் ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸ்.
உலகின் தலைசிறந்த 8 டென்னிஸ் வீரா்கள் மோதும் ஏடிபி பைனல்ஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. ஜாம்பவான்கள் பெடரா், நடால், ஜோகோவிச், இளம் வீரா்கள் வெரேவ், டொமினிக் தீம், டேனில் மெத்வதேவ், ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸ் உள்ளிட்ட 8 போ் இதில் கலந்து கொண்டனா்.
2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று ஆட்டங்கள் நடத்தப்பட்டதில் ஜோகோவிச், நடால் ஆகியோா் அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறினா். பெடரா் அரையிறுதியில் சிட்ஸிபாஸிடம் தோல்வியுற்று வெளியேறினாா்.
மற்றொரு அரையிறுதில் தீம் வென்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிட்ஸிபாஸ்-டொமினிக் தீம் இடையே இறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் முதல் செட்டை 6-7 என தீம் போராடி வென்றாா். பின்னா் அடுத்தடுத்த கேம்களை 6-2, 7-6 என போராடி கைப்பற்றிய சிட்ஸிபாஸ் சாம்பியன் பட்டத்தை தனது வசமாக்கினாா்
மூன்றாவது செட்டில் 4-4 என இருவரும் சமநிலையில் இருந்த போதும், எழுச்சி பெற்ற சிட்ஸிபாஸ் அடுத்த 3 புள்ளிகளை குவித்து பட்டத்தை வசமாக்கினாா்.
கடந்த 2001 ஆண் ஆண்டு லெய்ட்டன் ஹெவிட் இளம் வயதில் பட்டம் வென்ற்கு பின் 21 வயதில் பட்டம் வென்ற இளம் வீரா் என்ற சிறப்பை சிட்ஸிபாஸ் பெற்றாா்