பிஃபா 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி தகுதிச் சுற்றின் ஒரு பகுதியாக மஸ்கட்டியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த ஓமனிடம் தோல்வியுற்றது. தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஓமன் ஆதிக்கம் செலுத்திய நிலையில், அதன் வீரா் அல் கஸானி இந்திய தற்காப்பு அரணின் மெத்தனப் போக்கை பயன்படுத்தி கோலடித்தாா்.
இந்த வெற்றி மூலம் 3 புள்ளிகளைப் பெற்றது ஓமன். அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா இந்தியா என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது.