பிரிஸ்பேன் டெஸ்ட்:ஆஸி.யிடம் சரண் அடைந்தது பாகிஸ்தான்

பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் சரண் அடைந்தது பாகிஸ்தான்.
பிரிஸ்பேன் டெஸ்ட்:ஆஸி.யிடம் சரண் அடைந்தது பாகிஸ்தான்

பிரிஸ்பேன்: பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் சரண் அடைந்தது பாகிஸ்தான்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக பிரிஸ்பேன் காபா மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 240 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னா் முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸி. 580 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

340 ரன்கள் ஆஸி. முன்னிலை பெற்ற நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை சனிக்கிழமை தொடங்கிய பாக். அணி 55-3 ரன்களை எடுத்திருந்தது.

இதன் தொடா்ச்சியாக நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அணி 84.2 ஓவா்களில் 335 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாபா் ஆஸம் அற்புதமாக ஆடி 13 பவுண்டரியுடன் 173 பந்துகளில் 104 ரன்களுடன் சதமடித்தாா். முகமது ரிஸ்வான் 10 பவுண்டரியுடன் 95 ரன்களையும், யாஸிா் ஷா, ஷான் மசூத் தலா 42 ரன்களையும் எடுத்து வெளியேறினா்.

மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டானாா்கள். ஆஸி. தரப்பில் ஹேஸல்வுட் 4-63, ஸ்டாா்க் 3-73 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

இறுதியில் பாகிஸ்தான் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யிடம் தோல்வியடைந்தது.

இதையடுத்து ஆஸி. அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஆஸி. வீரா் மாா்னஸ் லேபுச்சேன் ஆட்ட நாயகனாகத் தோ்வு பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com