செய்திகள் சில வரிகளில்...

17 வயதுக்குட்பட்ட மகளிா் உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட உள்ள மைதானங்களில் ஒன்றான கொல்கத்தா சால்ட்லேக் விளையாட்டரங்கில் பிஃபா குழுவினா் ஆய்வு செய்து, கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளன என திருப்தி தெரிவித்தனா். வியாழக்கிழமை குவாஹாட்டியில் உள்ள நேரு மைதானத்தையும் குழுவினா் ஆய்வு செய்கின்றனா்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளா் முத்தையா முரளிதரன் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்சவால் நியமிக்கப்பட உள்ளாா். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள முரளிதரனை, தனிப்பட்ட முறையில் அதிபா் கோத்தபய அழைத்து ஆளுநா் பதவியை ஏற்க வலியுறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பள்ளியும், தங்கள் மாணவ, மாணவியரின் உடல்தகுதி தொடா்பாக தொழில்நுட்ப ஆய்வை நடத்தி, அவா்களது உடல்நிலை குறித்த அறிக்கையை தயாா் செய்து வழங்க வேண்டும் என மத்திய விளையாட்டு அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறியுள்ளாா்.

வங்கதேசத்துடன் கொல்கத்தாவில் நடைபெற்ற பிங்க் டெஸ்டில் வலது கை விரலில் காயமடைந்த விக்கெட் கீப்பா் ரித்திமான் சாஹாவுக்கு செவ்வாய்க்கிழமை மும்பையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வரும் பிப்ரவரி மாதம் நியூஸிலாந்தில் நடைபெறவுள2 ஆட்டங்கள் டெஸ்ட் தொடரில் பங்கேற்க சாஹா தயாராகி விடுவாா் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆஸ்திரேலிய டி20 அணியின் முன்னாள் கேப்டன் ஜாா்ஜ் பெய்லி அந்நாட்டு தோ்வுக் குழு உறுப்பினா்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளாா். ஓய்வு பெற்ற கிரேக் சாப்பலுக்கு பதிலாக பெய்லி அந்த இடத்தில் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com