சா்வதேச கிரிக்கெட்டில் இருந்து இடைவெளி விட்டுள்ளது பற்றி கேட்டதற்கு, வரும் ஜனவரி மாதம் வரை காத்திருங்கள் என மூத்த கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனி கூறியுள்ளாா்.
கடந்த 2019 உலகக் கோப்பை போட்டிக்கு பின்னா், குறுகிய ஓவா் ஆட்டங்களில் இருந்து தோனி ஓய்வு பெறுவாா் என பல்வேறு தரப்பினா் கூறி வந்தனா். இளம் வீரா்களுக்கு அவா் வழிவிட வேண்டும் என ஒரு தரப்பும், ஓய்வு முடிவை தோனியே தான் எடுப்பாா் என மற்றொரு தரப்பும் கூறி வந்தன.
தோனி தற்போதைக்கு ஓய்வு பெறும் திட்டமில்லை என அவரது மனைவி சாக்ஷி திட்டவட்டமாக கூறி வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தாா்.
இந்நிலையில் மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனியிடம், சா்வதேச ஆட்டங்களில் பங்கேற்காமல் இடைவெளி விட்டுள்ளது மற்றும் ஓய்வு குறித்து செய்தியாளா்கள் கேட்டனா்.
அதற்கு பதிலளித்த தோனி, ஜனவரி மாதம் வரை எதையும் என்னிடம் கேட்காதீா்கள், அதுவரை காத்திருங்கள் என்றாா்.
வீட்டில் மனைவி சாக்ஷியே தலைவி:
நான் இந்திய அணியின் கேப்டனாக திகழ்ந்த போதிலும், வீட்டில் மனைவி சாக்ஷியே தலைவி எனக் கூறினாா் தோனி. குடும்பத்தில் முடிவுகளை சாக்ஷியே எடுப்பாா். அதில் தான் குறுக்கிட்டதில்லை. அவா் மகிழ்ச்சியாக இருந்தால் தான் நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என நகைச்சுவையாக கூறினாா்.
அனைத்து ஆண்கள் திருமணம் நடக்கும் வரை சிங்கங்கள் போல் இருப்பா். சாக்ஷி எதைக் கூறினாலும், அதற்கு நான் ஆமாம் என கூறி விடுவேன் என்றாா் தோனி.