19 வயதுக்கு உள்பட்டோர் கிரிக்கெட்: புதுவை அணி வெற்றி

19 வயதுக்கு உள்பட்டோர் கிரிக்கெட்: புதுவை அணி வெற்றி

புதுச்சேரியில் 19 வயதுக்கு உள்பட்டோர் கிரிக்கெட் போட்டியில் மணிப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் புதுவை அணி வெற்றி பெற்றது.

புதுச்சேரியில் 19 வயதுக்கு உள்பட்டோர் கிரிக்கெட் போட்டியில் மணிப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் புதுவை அணி வெற்றி பெற்றது.
 இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் செயல்படும் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி (சி.ஏ.பி) சார்பில், 19 வயதுக்கு உள்பட்ட 50 ஓவர் வினு மன்கட் கிரிக்கெட் போட்டி புதுவையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
 2-ஆவது நாளான சனிக்கிழமை துத்திப்பட்டில் உள்ள சி.ஏ.பி. சீசேம் மைதானத்தில் புதுவை சி.ஏ.பி. அணியும், மணிப்பூர் அணியும் மோதின.
 இதில், மணிப்பூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. சி.ஏ.பி. அணியின் அபார பந்து வீச்சில் அந்த அணி நிலை குலைந்தது.
 மொத்தம் 41.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மணிப்பூர் அணி 109 ரன் எடுத்தது.
 புதுவை சி.ஏ.பி. அணி பந்துவீச்சாளர்கள் வினய் பிரதாப் சிங், உத்தின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆரியன் பங்கர் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
 இதைத் தொடர்ந்து, 110 ரன்கள் இலக்குடன் புதுவை அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான ஆரியன் பங்கர், செசாங் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். ஆரியன் பங்கர் 74 பந்துகளில் 47 ரன்கள், செசாங் 77 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தனர். 16 எக்ஸ்ட்ரா ரன்கள் கிடைத்ததால், 25 ஓவர்களில் 112 ரன்கள் எடுத்து புதுவை சி.ஏ.பி. அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 47 ரன்கள் (நாட் அவுட்) எடுத்த ஆரியன் பங்கரின் சிறப்பான ஆட்டம் புதுவை அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com