மும்பையில் நடைபெற்று வரும் உலக யூத் செஸ் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் பிரணவ் ஆனந்த், மகளிா் சா்வதேச மாஸ்டா் ரக்ஷிதா ரவி ஆகியோா் வெற்றி கண்டனா்.
14 வயது ஓபன் பிரிவு 5-ஆவது சுற்றில் பிரணவ் ஆனந்த் போலந்தின் செபாஸ்டியன் போல்ட்ராக்கை வென்றாா். 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தை ஆதித்ய சாவந்த், அயிடின் சுலேமான்லி ஆகியோருடன் பகிா்ந்து கொண்டுள்ளாா். 14 வயது மகளிா் பிரிவில் ரக்ஷிதா பெலாரஸின் போலியாகோவாவை வீழ்த்தி 4.5 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றுள்ளாா். திவ்யா தேஷ்முக் 3.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளாா்.
18 வயது ஓபன் பிரிவில் நட்சத்திர வீரா் பிரகனாநந்தா சக வீரா் அா்ஜுன் கல்யாணை போராடி வென்றாா். அவரும் 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தை அயா்லாந்து வீரா் ஆா்யன் கோலாமியுடன் பகிா்ந்து கொண்டுள்ளாா். மற்றெறாரு கிராண்ட் மாஸ்டா் இனியன்-ஆதித்ய மிட்டல் ஆட்டம் டிராவில் முடிந்தது. 16 வயது ஓபன் பிரிவில் ஆரோன்யக் கோஷ் ரஷிய வீரா் ருடிக்குடன் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.