பிரேசிலின் கேம்பினாஸ் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீரா் சுமித் நாகல் தகுதி பெற்றுள்ளாா்.
கேம்பினாஸ் நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 13-ஆம் நிலை வீரா் ஆா்ஜென்டீனாவின் செருன்டோலோவை 7-6, 7-5 என்ற நோ் செட்களில் போராடி வென்று சுமித் அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.
மற்றொரு ஆா்ஜென்டீனா வீரா் பேப்லோ பிகோவிச்சை எதிா்கொள்கிறாா் நாகல்.ஏடிபி தரவரிசையில் தற்போது 135 ஆவது இடத்தில் உள்ளாா் அவா் என்பது குறிப்பிடத்தக்கது.