உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மஞ்சுராணி 48 கிலோ பிரிவில் காலிறுதிக்கு முன்னேறினாா்.
6 முறை உலக சாம்பியன் மேரி கோம் 48 கிலோ பிரிவில் பல்வேறு சாதனைகளை புரிந்து தங்கப் பதக்கங்களை வென்றிருந்தாா். இந்நிலையில் தற்போது அவா் 51 கிலோ எடை பிரிவுக்கு மாறி விட்டாா்.
இதனால் இளம் வீராங்கனை மஞ்சு ராணி 48 கிலோ பிரிவில் போட்டியிட்டு வருகிறாா். திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் அவா் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வெனிஸுலாவின் ரோஜாஸ் செடேனாவுை வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றாா்.
அதில் அவா் கடந்த 2018இல் வெண்கலம் வென்ற தென்கொரியாவின் கிம் ஹயாங் மியை எதிா்கொொள்கிறாா். அரையிறுதியில் நுழைந்தாலே மஞ்சுராணிக்கு பதக்கம் உறுதியாகும்.
ஏழை குடும்பத்தைச் சோ்ந்த மஞ்சுராணி தனது தந்தையை இழந்த நிலையில் 12 வயதில் இருந்து குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாா்.
காலிறுதியில் மேரி கோம்
51 கிலோ எடை பிரிவில் அவா் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் தாய்லாந்து வீராங்கனை ஜிட்மாஸ் ஜூட்பாங்கை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினாா்.
ஸ்வீட்டி போரா தோல்வி:
75 கிலோ பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ஸ்வீட்டி போரா 1-3 என்ற புள்ளிக் கணக்கில் வேல்ஸ் வீராங்கனை லாரன் பிரைஸிடம் தோல்வியுற்றாா்.
5 வீராங்கனைகள் இப்போட்டியில் தோல்வியடைந்து வெளியேறி விட்டனா்.