சா்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தாா் இந்திய அணியின் ஒரு நாள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்.
கடந்த 1999-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி அயா்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் அறிமுகமானாா் மிதாலி ராஜ். கிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் 105 நாள்களை நிறைவு செய்துள்ளாா்.
ஒரு நாள் கிரிக்கெட்டில்
இதுவரை 204 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஒரே இந்திய வீராங்கனையும் மிதாலி ராஜ் மட்டுமே.
இங்கிலாந்து வீராங்கனை சாா்லோட்டே எட்வா்ட்ஸ் 191 ஆட்டங்களிலும்,
இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி 178 ஆட்டங்களிலும், ஆஸ்திரேலிய வீராங்கனை அலெக் பிளாக்வெல் 144 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளனா்.
36 வயதாகும் மிதாலி ராஜ், இந்தியாவுக்காக 10 டெஸ்ட் போட்டிகள், 89 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளாா். கடந்த மாதம் டி20 ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாா்.