கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
2020-ஆம் ஆண்டு வரை பயிற்சியாளருக்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மைக் ஹெஸன் தனது பதவிக்காலத்துக்கு முன்பாகவே பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து புதிய பயிற்சியாளராக கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே 2016-17 சீசனில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் அனில் கும்ப்ளே செயல்பட்டுள்ளார். மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகளின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.