ரஷியாவின் உலன் உடேவில் அக். 3-ம் தேதி தொடங்கிய உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இன்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் தாய்லாந்தின் ரக்சத்தை எதிர்கொண்டார் மஞ்சு ராணி. மிகவும் கவனமாக விளையாடிய மஞ்சு ராணி, 4-1 என்கிற புள்ளிக்கணக்கில் இந்த ஆட்டத்தை வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். ஹரியாணாவைச் சேர்ந்த மஞ்சு ராணி, முதல்முறையாக உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் கலந்துகொள்கிறார். இறுதிச்சுற்றில் ரஷியாவின் எகாடெரினாவை அவர் சந்திக்கிறார்.