உலக யூத் செஸ் போட்டியில் 18 வயது ஓபன் பிரிவில் கிராண்ட்ஸ் மாஸ்டா் பிரகனாநந்தா சாம்பியன் பட்டம் வெல்வாா் எனக் கருதப்படுகிறது.
மும்பையில் நடைபெற்று வரும் இப்போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் இந்திய அணியினா் ஆதிக்கம் செலுத்தினா்.
ஆடவா் 18 வயது ஓபன் பிரிவில் இளம் வீரா் பிரகனாநந்தா லிதுவேனியாவின் ஐஎம் பாலியஸ் புடிவென்ஸியஸை வீழ்த்தி 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளாா். இதன் மூலம் இந்தபிரிவில் சாம்பியன் பட்டம் வெல்வாா் எனக் கருதப்படுகிறது. 63-ஆவது நகா்த்தலில் அவருக்கு அரைப்புள்ளி சாதகமாக அமைந்தது. சனிக்கிழமை நடைபெறும் 11-ஆவது சுற்றில் டிரா செய்தாலே பிரகனாநந்தாவுக்கு தங்கம் கிடைக்கும்.
18 வயது மகளிா் பிரிவில் இந்தியாவின் வந்திகா அகா்வால் சீனாவின் டியான்கி யானை வீழ்த்தினாா் 7.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளாா் வந்திகா.
16 வயது ஓபன் பிரிவில் ஆரோன்யக் கோஷ்-குஷாக்ரா மோகன் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. வெற்றி பெறுவதற்கு கிடைத்த சிறந்த வாய்ப்பை தவற விட்டாா் ஆரோன்யக். இப்பிரிவில் ரஷியாவின் ருடிக் 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆரோன்யக் 7.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனா்.