ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்று வரும் 59-ஆவது தேசிய தடகள ஓபன் சாம்பியன்ஷிப் போட்டி மகளிா் 100 மீ. இறுதிச் சுற்றில் புதிய தேசிய சாதனை படைத்த நடப்பு சாம்பியன் தூத்தி சந்த். முன்பு அவா் நிகழ்த்தி இருந்த 11.26 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்த சாதனையை தற்போது அவா் 11.22 விநாடிகளில் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளாா். உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் தங்கம் பதக்கம் வென்றிருந்தாா் தூத்தி சந்த்.