தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தை 1 இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றி உலக சாதனை நிகழ்த்தியது இந்தியா.
புணேயில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 601/5 ரன்களுடன் டிக்ளேர் செய்தது.
தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, பாலோ ஆனை தொடர்ந்தது. இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 189 ரன்களுக்கு சுருண்டு தோல்வியைத் தழுவியது.
சொந்த மண்ணில் தொடர்ந்து 11 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றிய இந்தியா, தொடர்ந்து 10 டெஸ்ட் தொடர்களை வென்ற ஆஸ்திரேலிய அணியின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை படைத்தது.