நொடி நேர ஆத்திரத்தால், பறிபோன ராஞ்சி டெஸ்ட் வாய்ப்பு: நாடு திரும்பினார் தென் ஆப்பிரிக்க வீரர்!

தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்கிரம் காயம் காரணமாக ராஞ்சி டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.
நொடி நேர ஆத்திரத்தால், பறிபோன ராஞ்சி டெஸ்ட் வாய்ப்பு: நாடு திரும்பினார் தென் ஆப்பிரிக்க வீரர்!


தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்கிரம் காயம் காரணமாக ராஞ்சி டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் ராஞ்சியில் சனிக்கிழமை தொடங்குகிறது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்கிரம் மணிக்கட்டில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ராஞ்சி டெஸ்டில் இருந்து விலகியுள்ளார்.

முதல் இரண்டு டெஸ்ட் ஆட்டங்களில் அவர் பெரிதளவு சோபிக்கத் தவறினார். முதல் டெஸ்டில், 5 மற்றும் 39 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து நடைபெற்ற 2-வது டெஸ்டில் அவர் இரண்டு இன்னிங்ஸிலும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 

இதில், இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்த பிறகு, விரக்தியின் வெளிப்பாடாக கனமான ஒரு பொருளை நோக்கி கையால் குத்தியுள்ளார். இதன் விளைவாக, அவரது கையில் காயம் ஏற்பட்டது. சிடி ஸ்கேன் முடிவில் அவரது மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. 

இதனால், தென் ஆப்பிரிக்க அணியின் மருத்துவக் குழு அவரை ராஞ்சி டெஸ்டில் இருந்து நீக்கியுள்ளது. இதையடுத்து, மார்கிரம் இன்று காலை தென் ஆப்பிரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார். இருந்தபோதிலும் தென் ஆப்பிரிக்க அணியில் இவருக்குப் பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com