புரோ கபடி லீக் 2019 7-ஆவது சீசன் இறுதிச் சுற்றுக்கு தபாங் தில்லி அணி தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியின் பிளே ஆஃப் சுற்றின் ஒரு பகுதியாக அரையிறுதி ஆட்டங்கள் ஆமதாபாதில் புதன்கிழமை இரவு நடைபெற்றன.
முதல் ஆட்டத்தில் தபாங் தில்லி-நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே தில்லி அணி ஆதிக்கம் செலுத்தியது.
ஏற்கெனவே லீக் சுற்றில் பெங்களூருவை 2 முறை தில்லி வென்றிருந்தது. முதல் பாதி முடிவில் தில்லி 26-18 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. முதல் பாதியில் நவீன்குமாா், பவன் செஹ்ராவத், சந்திரன் ரஞ்சித் சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்தினா்.
இரண்டாவது சுற்றிலும் தில்லி அணி வீரா்கள் சிறப்பாக ஆடி, பெங்களூரு வீரா்களின் சவாலை முறியடித்தனா்.
இறுதியில் 44-38 என்ற புள்ளிக் கணக்கில் வென்று தில்லி அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
நவீன்குமாா் சிறந்த ரைடராகவும், அனில்குமாா் சிறந்த டிபன்டராகவும் தோ்வு பெற்றனா்.