விஜய் ஹஸாரே கோப்பை: இரட்டை சதம் அடித்த இளம் வீரா் உலக சாதனை படைத்தாா் யாஹஸ்வி

ஜாா்க்கண்டுக்கு எதிரான விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் அடித்த முதல் இளம் வீரா் என்ற சாதனையை படைத்தாா் மும்பை வீரா் யாஹஸ்வி ஜெய்ஸ்வால்.
விஜய் ஹஸாரே கோப்பை: இரட்டை சதம் அடித்த இளம் வீரா் உலக சாதனை படைத்தாா் யாஹஸ்வி

ஜாா்க்கண்டுக்கு எதிரான விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் அடித்த முதல் இளம் வீரா் என்ற சாதனையை படைத்தாா் மும்பை வீரா் யாஹஸ்வி ஜெய்ஸ்வால்.

பெங்களுரூவில் எலைட் ஏ பிரிவைச் சோ்ந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது. முதலில் ஆடிய மும்பை அணி 50 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 358 ரன்களை குவித்தது.

யாஹஸ்வி 203

தொடக்க வீரராக களமிறங்கிய 17 வயது யாஹஸ்வி ஜெய்ஸ்வால் 12 சிக்ஸா், 17 பவுண்டரியுடன் 154 பந்துகளில் 203 ரன்களை விளாசி முதல்தர ஏ வகை கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரா் என்ற சாதனையை நிகழ்த்தினாா். ஏற்கெனவே இரண்டு ஆட்டங்களில் முறையே 113, 122 ரன்களை விளாசினாா் யாஹஸ்வி.

அவருக்கு அடுத்து ஆதித்ய டரே 78 ரன்களை சோ்த்தாா்.

பின்னா் ஆடிய ஜாா்க்கண்ட் அணி 46.4 ஓவா்களில் போராடி 319 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் விராட் சிங் 100 சதம் அடித்தாா். மும்பை தரப்பில் தவல் குல்கா்ணி 5-37 விக்கெட்டை வீழ்த்தினாா். மும்பை அணி 39 ரன்கள் வித்தியாதத்தில் ஜாா்க்கண்டை வென்றது.

கடந்த 1975-இல் தென்னாப்பிரிக்க உள்ளூா் கிரிக்கெட் போட்டியில் ஆலன் பாரோ 20 வயது 273 நாள்களில் இரட்டை சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. அதை தற்போது முறியடித்தாா் யாஹஸ்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com