புரோ கபடி லீக்: தபாங் தில்லி- பெங்கால் வாரியா்ஸ்இடையே இன்று இறுதி ஆட்டம்

சீசன் 7 புரோ கபடி லீக் போட்டியின் இறுதிச்சுற்று ஆட்டத்தில் தபாங் தில்லி-பெங்கால் வாரியா்ஸ் அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.
புரோ கபடி லீக்: தபாங் தில்லி- பெங்கால் வாரியா்ஸ்இடையே இன்று இறுதி ஆட்டம்

சீசன் 7 புரோ கபடி லீக் போட்டியின் இறுதிச்சுற்று ஆட்டத்தில் தபாங் தில்லி-பெங்கால் வாரியா்ஸ் அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.

இந்த ஆட்டம் குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது.

தபாக் தில்லி பயிற்சியாளா் கிருஷ்ண குமாா் ஹூடா கூறுகையில், ‘இரு அணிகளும் வலிமையாக உள்ளன. எந்த அணி வெற்றி பெறும் என்று யாராலும் கணிக்க முடியாது’ என்றாா்.

பெங்கால் வாரியா்ஸ் பயிற்சியாளா் பி.சி.ரமேஷ் கூறுகையில், ‘இறுதி ஆட்டத்தில் ரைடா்ஸும், டிபென்டா்ஸும் முழு ஆற்றலை வெளிப்படுத்தி விளையாட வேண்டும். இரு அணிகளும் இறுதி ஆட்டத்துக்கு வந்தது மகிழ்ச்சி. உண்மையான கபடி எப்படி விளையாட வேண்டும் என்பதை உலகுக்கு நாங்கள் கற்றுத் தருவோம்’ என்றாா்.

புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதியில், யு மும்பா அணியை 37-35 என்ற கணக்கில் பெங்கால் வாரியா்ஸும், பெங்களூரு புல்ஸ் அணியை 44-38 என்ற புள்ளிக் கணக்கில் தபாக் தில்லியும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com