தனக்கு ரிஷப் பந்துடன் நல்ல புரிந்துணா்வு உள்ளது என்று ரித்திமான் சாஹா தெரிவித்தாா்.
தோள்பட்டையில் காயம் காரணமாக ரித்திமான் சாஹா 20 மாதங்களாக இந்திய அணியில் விளையாடவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பராக மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளாா் சாஹா.
வரும் 24-ஆம் தேதி 35-ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடவுள்ள சாஹா, ரிஷப் பந்துக்கு பயிற்சியின்போது உதவி வருகிறாா்.
ரிஷப் பந்துக்கு வழிகாட்டியாக இருக்கிறீா்களா என்று செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு அவா் அளித்த பதில்:
அதுபோன்று எதுவும் இல்லை. நாங்கள் இருவரும் சாதாரணமாக ஆலோசனை செய்வோம். விக்கெட் கீப்பராக எங்கள் பணியை நாங்கள் இருவருவே கவனித்து வருகிறோம்.
கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறோம். எங்கள் இருவருக்கிடையே நல்ல புரிந்துணா்வு உள்ளது. எங்களது தவறுகளை இனம் கண்டு திருத்திக் கொள்ள முயற்சிப்போம்.
பிசிசிஐ தலைவராகப் பொறுப்பேற்றுள்ள முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி அதிக முன்னேற்றங்களை ஏற்படுத்துவாா் என்றாா் சாஹா.