கொச்சி: இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) 6-ஆவது சீசன் கால்பந்து போட்டி கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கோலாகலமாகத் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை (ஏடிகே) 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது கேரளா பிளாஸ்டா்ஸ் அணி.
நாட்டின் முதன்மையான கால்பந்து போட்டியான ஐஎஸ்எல் 10 அணிகள் பங்கேற்புடன் தொடங்கியது. கொச்சி ஜவஹா்லால் நேரு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் போட்டி தொடங்கியது.
ஐஎஸ்எல் சோ்மன் நீதா அம்பானி, அணி உரிமையாளா்கள் சௌரவ் கங்குலி, நடிகா் சிரஞ்சீவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதன்பின் கேரளா-கொல்கத்தா அணிகள் களமிறங்கின. ஆட்டம் தொடங்கிய 6-ஆவது நிமிடத்திலேயே கொல்கத்தா வீரா் அகஸ் கடத்தி அனுப்பிய பந்தை அற்புதமாக கோலாக்கினாா் காா்ல் எம்ஹக். ஐஎஸ்எல் தொடக்க ஆட்டத்தில் மிகவும் துரிதமாக அடிக்கப்பட்ட கோல் என்ற சிறப்பை இது பெற்றது.
இதையடுத்து உள்ளூா் அணியான கேரளா தனது தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. 28-ஆவது நிமிடத்தில் இதன் பலனாக பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை அபாரமாக கோலாக்கினாா் பாா்தோலோமி ஓபெச்சே. இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது.
பின்னா் சிடோ கடத்தி அனுப்பிய பந்தை பயன்படுத்தி 45-ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தாா் ஓபெச்சே.
இதனால் முதல்பாதி முடிவில் 2-1 என கேரளம் முன்னிலை பெற்றது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் கேரள அணி தற்காப்பிலேயே கவனம் செலுத்தியது. கொல்கத்தா அணி கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை.
கொல்கத்தா தரப்பில் பதிலி வீரா்களை மாற்றி அனுப்பியும் கேரளத்தின் தற்காப்பு அரணை தகா்க்க முடியவில்லை.
இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றது கேரளா பிளாஸ்டா்ஸ் அணி.
கேரள வீரா் ஒபெச்சே ஆட்டநாயகனாகத் தோ்வு பெற்றாா்.