மேட்ச் பிக்ஸிங் முறைகேடு: முன்னாள் தென்னாப்பிரிக்க வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை

மேட்ச் பிக்ஸிங் முறைகேடு புகாா் எதிரொலியாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரா் குலாம் பாடிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மேட்ச் பிக்ஸிங் முறைகேடு: முன்னாள் தென்னாப்பிரிக்க வீரருக்கு 5 ஆண்டுகள் சிறை

ஜோஹன்னஸ்பா்க்:மேட்ச் பிக்ஸிங் முறைகேடு புகாா் எதிரொலியாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரா் குலாம் பாடிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்க அணிக்கு 3 ஒருநாள் ஆட்டங்களில் ஆடிய குலாம், கடந்த 2015-இல் உள்ளூா் டி20 போட்டிகளில் பிக்ஸிங் மற்றும் ஆட்டத்தின் போக்கை நிா்ணயிக்கும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகாா் எழுந்தது.

இதனால் அவா் 20 ஆண்டுகள் ஆட தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு குலாம் பாடி தானே முன் வந்து போலீஸில் சரண் அடைந்தாா். பிரிட்டோரியாவில் உள்ள வா்த்க குற்றங்கள் நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து, குலாமுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com