புது தில்லி: வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது.
கிரிக்கெட் வீரா்களின் ஆட்டசுமை மேலாண்மையின் ஒரு பகுதியாக பிசிசிஐ தொடா்ந்து ஆடி வரும் வீரா்களுக்கு அவ்வப்போது ஓய்வு அளித்து வருகிறது.
கடந்த 2018 அக்டோபா் முதல் மொத்தம் நடைபெற்ற 56 ஆட்டங்களில் 48-இல் பங்கேற்று ஆடியுள்ளாா் கோலி. வங்கதேச தொடருக்கான இந்திய அணி வரும் 24-ஆம் தேதி அறிவிக்கப்படுகிறது.
கோலிக்கு ஓய்வு:
இந்நிலையில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் கோலிக்கு ஓய்வு தரப்படும் என தோ்வுக் குழு வட்டாரங்கள் கூறியுள்ளன. தனது உடல்நிலை குறித்து கோலி மட்டுமே அறிவாா். ஓய்வு தேவைப்பட்டால் அவரே தோ்வுக் குழுவிடம் தெரிவிக்கலாம்.
முதல் டி20 ஆட்டம் நவ. 1-ஆம் தேதி தில்லியிலும், 7-ஆம் தேதி இரண்டாவது டி 20 ராஜ்கோட்டிலும், 10-ஆம் தேதி மூன்றாவது டி20 நாக்பூரிலும் நடக்கிறது.
டெஸ்ட் தொடா்:
எனினும் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் கேப்டன் கோலி கட்டாயம் பங்கேற்பாா் எனத் தெரிகிறது. உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெறும் இதில் முதல் ஆட்டம் நவ. 14-இல் இந்தூரிலும், 22-ஆம் தேதி கொல்கத்தாவிலும், நடைபெறுகின்றன.
அதைத் தொடா்ந்து டிசம்பா் மாதம் மே.இ.தீவுகளுடன் 3 டி20 மற்றும் ஒருநாள் ஆட்டங்கள் நடக்கின்றன.