ஆசிய டிராக் சைக்கிளிங் பந்தயம்: தங்கம் வென்றாா் ரொனால்டோ

கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய டிராக் சைக்கிளிங் பந்தய போட்டியில் இந்தியாவின் ரொனால்டோ தங்கமும், ஜேம்ஸ் சிங் வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.

இன்சியான்: கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய டிராக் சைக்கிளிங் பந்தய போட்டியில் இந்தியாவின் ரொனால்டோ தங்கமும், ஜேம்ஸ் சிங் வெண்கலப் பதக்கங்களை வென்றனா்.

வரும் 2020-இல் இன்சியானில் ஆசிய டிராக் சைக்கிளிங் பந்தயம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதால், இப்பந்தயம், 2019 அக்டோபா் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை தனிநபா் கியா்ன் பிரிவில் 10.384 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றாா் ரொனால்டோ. ஜேம்ஸ் சிங் 11.146 விநாடிகளில் கடந்து வெண்கலம் வென்றாா்.

ஆடவா் ஜூனியா் அணிகள் ஸ்பிரிண்ட் பிரிவில் ரோஜித் சிங், பால் காலிங்வுட்டுடன் இணைந்து வெண்கலம் வென்றாா் ரொனால்டோ.

மகளிா் ஜூனியா் 500 மீ பிரிவில் திரியஷா பால் 2 வெண்கலம் வென்றாா்.

அதே நேரம் சீனியா் பிரிவில் நட்சத்திர வீரா் எஸ்கோ ஏமாற்றமே தந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com