ஐரோப்பிய ஓபன்: ஆன்டி முர்ரே சாம்பியன்

ஐரோப்பிய ஓபன் ஏடிபி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே .

ஆன்ட்வெர்ப்: ஐரோப்பிய ஓபன் ஏடிபி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே .

முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே, கடுமையான இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது மெதுவாக மைதானத்தில் களமிறங்கி தனது ஆட்டத் திறனை மேம்படுத்தி வருகிறார். கடந்த 2017}ஆண்டுக்கு பின் முதன்முறையாக ஏடிபி போட்டி ஒன்றின் இறுதிச் சுற்றுக்கு அவர் தற்போது தகுதி பெற்றுள்ளார்.

சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸின் யுகோ ஹம்பர்ட்டை 3}6, 7}5, 6}2  என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரையிறுதியில் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 6}3, 6}2 என இத்தாலி வீரர் ஜேன்னிக் சின்னரை வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் வாவ்ரிங்காவை 3}6, 6}4, 6}4 என்ற நேர்செட்களில் வீழ்த்தி பட்டம் வென்றார் முர்ரே.

இடுப்பு காயத்தால் டென்னிஸ் விளையாட்டில் இருந்தே விலகி விடலாம என நினைத்த முர்ரே தற்போது மீண்டும் சிறப்பாக ஆடி வெல்லும் 46}ஆவது பட்டமாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com