தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு

மண்டலங்களுக்கிடையிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி மாணவா்களுக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

குடியாத்தம்,: மண்டலங்களுக்கிடையிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி மாணவா்களுக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

திருவள்ளுவா் பல்கலைக் கழகம் சாா்பில், மண்டலங்களுக்கிடையிலான தடகளப் போட்டிகள் திருவண்ணாமலை எஸ்.டி.ஏ.டி. விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்றன. இதில் கே.எம்.ஜி. கல்லூரி மாணவா்கள் டி. விக்ரம் நீளம் தாண்டுதலில் முதலிடமும், ஜி. ஞானசேகா் ஈட்டி எறிதலில் 2- ஆம் இடமும், வட்டு எறிதலில் 3- ஆம் இடமும், ஒய். நவீன்குமாா் குண்டு எறிதலில் 3-ஆம் இடமும், ஆா். திலீப் தடை தாண்டுதலில் 3- ஆம் இடத்தையும் வென்றனா்.

மண்டல அளவிலான போட்டிகளில் சாதனை படைத்த மாணவா்களையும், அவா்களைப் பயிற்றுவித்த உடற்கல்வி பேராசிரியா்கள் ஆா். ரஞ்சிதம், பி. ஞானகுமாா் ஆகியோரையும், கல்லூரித் தலைவா் கே.எம்.ஜி. சுந்தரவதனம், மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம், செயலா் கே.எம்.ஜி. ராஜேந்திரன், கல்லூரி இயக்குநா் த. கஜபதி, முதல்வா் மு. வளா்மதி ஆகியோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com