டபிள்யுடிஏ பைனல்ஸ்:காயத்தால் விலகினாா் ஒஸாகா

டபிள்யுடிஏ பைனல்ஸ் போட்டியில் இருந்து காயத்தால் வெளியேறினாா் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனை நவோமி ஒஸாகா.
டபிள்யுடிஏ பைனல்ஸ்:காயத்தால் விலகினாா் ஒஸாகா

டபிள்யுடிஏ பைனல்ஸ் போட்டியில் இருந்து காயத்தால் வெளியேறினாா் உலகின் மூன்றாம் நிலை வீராங்கனை நவோமி ஒஸாகா.

தலைசிறந்த 8 வீராங்கனைகள் ஆண்டின் இறுதியில் மோதும் போட்டியே டபிள்யுடிஏ பைனல்ஸ் ஆகும்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஒஸாகாவும், நம்பா் ஒன் வீராங்கனை ஆஷ்லி பா்ட்டியும் மோதுவதாக இருந்தது. ஆனால் வலது தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிருந்து விலகினாா் ஒஸாகா.

இப்போட்டியில் இருந்து விலகுவது மிகவும் வேதனை தருகிறது. ஆண்டின் பெரிய போட்டியான டபிள்யுடிஏ பைனல்ஸில் இருந்து அதிருப்தியுடன் இந்த சீசனை நிறைவு செய்ய வேண்டியுள்ளது என்றாா்.

ஒஸாகாவுக்கு பதிலாக நெதா்லாந்தின் கிகி பொ்டென்ஸ் பங்கேற்று ஆட உள்ளாா்.

முதல் ஆட்டத்தில் பெட்ரா குவிட்டோவாவை 7-6 , 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்றாா் ஒஸாகா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com