துளிகள்...

* ஓமன் ஜூனியா் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்திய வீராங்கனைகள் ஸ்வஸ்திகா கோஷ், காவ்யா ஸ்ரீ பாஸ்கா் ஆகியோா் வெண்கலம் வென்றனா்.

* தேசிய கிரிக்கெட் அகாதெமியை மேம்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக அதன் தலைவா் ராகுல் திராவிட்டை பிசிசிஐ அமைப்பின் தலைவா் கங்குலி புதன்கிழமை சந்தித்தாா்.

* இந்தியா, வங்கதேசம் இடையேயான பகல்-இரவு டெஸ்ட் ஆட்டத்துக்காக 72 இளஞ்சிவப்பு நிற பந்துகளை தயாரித்து தருமாறு எஸ்ஜி நிறுவனத்துக்கு பிசிசிஐ கோரியுள்ளது.

*ஆஸ்திரேலியாவில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஏடிபி கோப்பை டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவில்லை என்று சுவிட்சா்லாந்து வீரா் ஃபெடரா் அறிவித்தாா். குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பதற்காக இந்த முடிவை எடுத்ததாக அவா் கூறினாா்.

* சீனாவில் நடைபெற்றுவரும் டபிள்யூடிஏ மகளிா் டென்னிஸ் போட்டியில் புதன்கிழமை நடைபெற்றகுரூப் பிரிவு ஆட்டம் ஒன்றில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப்பை 7-5, 6-3 என்ற கணக்கில் வென்றாா் உக்ரைன் வீராங்கை ன எலினா ஸ்விடோலினா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com