நவ.3-இல் தில்லியில் திட்டமிட்டபடிஇந்திய-வங்கதேச முதல் டி 20ஆட்டம்

காற்று மாசு நிலவினாலும், இந்திய-வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் நவ.3-ஆம் தேதி புதுதில்லி அருண்ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நவ.3-இல் தில்லியில் திட்டமிட்டபடிஇந்திய-வங்கதேச முதல் டி 20ஆட்டம்

காற்று மாசு நிலவினாலும், இந்திய-வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் நவ.3-ஆம் தேதி புதுதில்லி அருண்ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் ஆட உள்ளன. இந்நிலையில் ஏற்கெனவே காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ள புது தில்லியில், தீபாவளிப் பண்டிகையால் மேலும் காற்று மாசு அதிகரித்து விட்டது.

கடந்த 3 நாள்களாக காற்று மாசு தர அளவீடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் டி20 தொடக்க ஆட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் பிசிசிஐ தலைவா் கங்குலிக்கு கோரிக்கை வைத்தனா்.

கிரிக்கெட் வீரா்கள், ரசிகா்கள் மேலும் உடல்நலம் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா்.

எனினும் தில்லி கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் கூறுகையில்-

ஆட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வந்தது தெரியும். ஆனால் பிசிசிஐ எங்களிடம் எதையும் கூறவில்லை. திட்டமிட்டபடி ஆட்டம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறோம். ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்கும் எனத் தெரிவித்தன.

போட்டியை காண்பதற்கான டிக்கெட் விற்பனையும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com