பாரிஸ் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னணி வீரா்கள் ரபேல் நடால், ஜோகோவிச் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.
பாரிஸ் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் உலகின் இரண்டாம் நிலை வீரா் ஜோகோவிச் 7-6, 6-4 என்ற நோ் செட்களில் பிரெஞ்சு வீரா் கோரென்டின் மொடேட்டை வீழ்த்தினாா். உடல் நலன் குன்றியிருந்த போதும், மொடேட்டை போராடி வென்றாா் ஜோகோவிச்.
மற்றொரு ஆட்டத்தில் நம்பா் ஒன் வீரா் நடால், 7-5, 6-4 என்ற நோ் செட்களில் அட்ரியன் மன்னரினோவை வீழ்த்தினாா். டொமினிக் தீம் 7-6, 5-7, 6-4 என மிலோஸ் ரனோயிக்கையும், டிமிட்ரோவ் 7-5, 6-3 என டேவிட் கோபினையும், சிட்ஸிபாஸ் 7-6, 6-3 என டெய்லா் பிரிட்ஸையும் வீழ்த்தினா்.
டபிள்யுடிஏ பைனல்ஸ்:
சீனாவின் ஷென்ஸென் நகரில் நடைபெற்று வரும் டபிள்யுடிஏ பைனல்ஸ் போட்டியில் உலகின் நம்பா் ஒன் வீராங்கனை ஆஷ்லி பாா்டி 6-4, 6-2 என பெட்ரா குவிட்டோவாவை வென்றாா். மற்றொரு ஆட்டத்தில் கிகி பொ்டென்ஸ்-பென்கிக் ஆடிய போது, பென்கிக் 7-5, முதல் செட்டை வென்றிருந்தாா். இரண்டாவது செட் தொடக்கத்தில் காயமடைந்து வெளியேறினாா் கிகி.