வங்கதேச அணியுடன் நடைபெறும் ஓரே டெஸ்ட் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆப்கானிஸ்தான் அணி 374 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சிட்டகாங் நகரில் நடைபெறுகிறது. ஆப்கன் அணி முதல் இன்னிங்ஸில் 342 ரன்களுக்கும், வங்கதேச அணி 205 ரன்களுக்கும் ஆல் அவுட்டாயின. அதைத் தொடர்ந்து ஆப்கன் அணி தனது 2-ஆவது இன்னிங்ûஸ ஆடியது.
மூன்றாம் நாளான சனிக்கிழமை ஆட்ட நேர முடிவில் 83.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 237 ரன்களை எடுத்திருந்தது ஆப்கன்.
இப்ராஹிம் ஸட்ரன் 4 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 87 ரன்களையும், அஷ்கர் ஆப்கன் 2 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 50 ரன்களையும் விளாசினர்.
கேப்டன் ரஷீத் கான் 6 பவுண்டரியுடன் 24 ரன்களை எடுத்து அவுட்டானார். அப்ஸர் ஸஸாய் 34 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
வங்கதேச தரப்பில் ஷகிப் அல் ஹசன் 3-53, டைஜுல் இஸ்லாம் 2-68, நயீம் ஹசன் 2-61 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இதன் மூலம் வங்கதேசத்தைக் காட்டிலும் 374 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது ஆப்கானிஸ்தான்.