உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் கத்தாரை 0-0 என டிரா செய்தது இந்தியா.
பிஃபா உலகக் கோப்பை போட்டிகள் 2022-இல் கத்தாரில் நடைபெறவுள்ளன. இதற்காக தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
குவாஹாட்டியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஓமனிடம் போராடி தோற்றது.
இதன் தொடர்ச்சியாக டோஹாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆசிய சாம்பியன் கத்தாருடன் மோதியது இந்தியா. வலுவான தற்காப்பு ஆட்டத்தால், கத்தாரின் கோலடிக்கும் முயற்சிகளை முறியடித்தனர். கேப்டனாக செயல்பட்ட குர்ப்ரீத் சிங் சாந்து அற்புதமாக செயல்பட்டு எதிரணியின் கோல் வாய்ப்புகளை முறியடித்தார். அடுத்து அக்டோபர் 15-ஆம் தேதி வங்கதேசத்துடன் மோதுகிறது இந்தியா.