யு-23 கிரிக்கெட்: இந்தியா-வங்கதேசம் இடையேயான போட்டி இடம் மாற்றம்

இந்தியா, வங்கதேச அணிகள் இடையேயான 23 வயதுக்குள்பட்டோருக்கான (யு-23) கிரிக்கெட் தொடர், மோசமான வானிலை காரணமாக ராய்ப்பூரிலிருந்து லக்னௌவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
யு-23 கிரிக்கெட்: இந்தியா-வங்கதேசம் இடையேயான போட்டி இடம் மாற்றம்


இந்தியா, வங்கதேச அணிகள் இடையேயான 23 வயதுக்குள்பட்டோருக்கான (யு-23) கிரிக்கெட் தொடர், மோசமான வானிலை காரணமாக ராய்ப்பூரிலிருந்து லக்னௌவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், இரு நாடுகளுக்கு இடையே செப்டம்பர் 19ஆம் தேதி, 23 வயதுக்குள்பட்டோருக்கான 5 ஆட்டங்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் தொடங்குவதாக இருந்தது. 
அந்நகரில் இடைவிடாமல் மழை பெய்து வருவதன் காரணமாக உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவுக்கு போட்டி மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com