இந்தியா, வங்கதேச அணிகள் இடையேயான 23 வயதுக்குள்பட்டோருக்கான (யு-23) கிரிக்கெட் தொடர், மோசமான வானிலை காரணமாக ராய்ப்பூரிலிருந்து லக்னௌவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், இரு நாடுகளுக்கு இடையே செப்டம்பர் 19ஆம் தேதி, 23 வயதுக்குள்பட்டோருக்கான 5 ஆட்டங்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் தொடங்குவதாக இருந்தது.
அந்நகரில் இடைவிடாமல் மழை பெய்து வருவதன் காரணமாக உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவுக்கு போட்டி மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.