ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து 294

ஆஷஸ் தொடரின் 5-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 294 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


ஆஷஸ் தொடரின் 5-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 294 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆட்டத்தின் முதல் நாளான வியாழக்கிழமை இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்களுடன் நிறைவு செய்தது.
அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை ஜோஸ் பட்லர், ஜேக் லீச் தங்கள் ஆட்டத்தை தொடர்ந்தனர். மேலும் 6 ரன்கள் சேர்த்து பட்லர் 70 ரன்களுடன் அவுட்டானார்.  ஜேக் லீச்சும் 21 ரன்களுடன் மார்ஷ் பந்தில் போல்டானார்.
இறுதியில் 294 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இங்கிலாந்து.
ஆஸி. தரப்பில் மிச்செல் மார்ஷ் அபாரமாக பந்துவீசி 5-46 விக்கெட்டுகளையும், பேட் கம்மின்ஸ், 3, ஹேஸல்வுட் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
பின்னர் ஆடிய ஆஸி. அணியும் திணறியே ரன்களை சேர்த்து வருகிறது. தேநீர் இடைவேளையின்போது, 44 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்திருந்தது ஆஸி. வார்னர் 5, மார்கஸ் ஹாரிஸ் 3, மார்னஸ் லேபுச்சேன் 48, மேத்யூ வேட் 19 ரன்களுக்கு அவுட்டாகினர். 
ஸ்மித் அபார சதம்:
அதிரடி வீரர் ஸ்டீவ் ஸ்மித் நிலைத்து ஆடி 27-ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். அவர் 59 ரன்களுடனும், மார்ஷ் 12 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com