காயம் காரணமாக இந்திய பாட்மிண்டன் நட்சத்திர வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், சீன மற்றும் கொரிய ஓபன் போட்டிகளில் இருந்து விலகினார்.
சீன, மற்றும் கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், நட்சத்திர வீரர் ணகாந்த், மூட்டு காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.
செப். 17-இல் சாங்ஷூவில் சீன ஓபனும், 24-இல் இன்சியானில் கொரிய ஓபன் போட்டிகளும் நடைùபெறுகின்றன.
இதில் காந்த், சாய் பிரணீத் உள்ளிட்டோர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் காயம் காரணமாக அவர் இதில் இருந்து விலகி விட்டார்.
இறுதியாக அவர் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ரவுண்ட் 16 சுற்றில் தோல்வியடைந்தார்.