ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு இந்திய ஆடவர் அணியின் முன்னேறி உள்ளனர்.
இந்தோனேஷியாவின் யோக்யகர்தா நகரில் ஐடிடிஎப் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்திய ஆடவர் அணி ஏற்கெனவே குவைத், இலங்கை அணிகளை 3-0 என்ற கேம் கணக்கில் வீழ்த்தினர். இதன் தொடர்ச்சியாக
நாக் அவுட் சுற்றில் முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 3-1 எனவும், தாய்லாந்துடன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்திலும் 3-0 என்ற கேம் கணக்கில் அபார வெற்றி பெற்றனர்.
இதன் மூலம் காலிறுதிச் சுற்றில் நுழைந்தனர். பிரதான சுற்றில் 8 அணிகள் மோதுகின்றன.
சரத் கமல் 3-2 என தாய்லாந்தின் பாடஸக்கையும், சத்யன் ஞானசேகரன் 3-1 என சுப்னட்டையும், வென்றனர். மூன்றாவது ஆட்டத்தில் ஹர்மித் தேசாய் 3-2 என யனாபோங்கை வீழ்த்தினார். இதன் மூலம் 3-0 என இந்தியா வெற்றி பெற்றது.
மகளிர் அணி லெபனான், ஜோர்டானை 3-0 என வீழ்த்தியது. உஸ்பெகிஸ்தானை 3-0 என வென்ற நிலையில், தாய்லாந்திடம் 0-3 என தோல்வியடைந்தது. அடுத்து மலேசியாவுடன் மோதுகிறது இந்திய மகளிர் அணி.