அபார பேட்டிங் & பந்துவீச்சு: வலுவான நிலையில் இந்திய ஏ அணி!

இந்திய ஏ அணித் தரப்பில் நதீம், குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். 
அபார பேட்டிங் & பந்துவீச்சு: வலுவான நிலையில் இந்திய ஏ அணி!

இந்திய-தென்னாப்பிரிக்க ஏ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 417 ரன்கள் எடுத்துள்ளது.

மைசூரில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதல் நாள் முடிவில் இந்திய ஏ அணி, 74 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்தது. கருண் நாயர் 78, சஹா 36 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் இந்திய ஏ அணி, 417 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. ஷுப்மன் கில் 92, கருண் நாயர் 78, சஹா 60, ஷிவம் டுபே 68, ஜலஜ் சக்ஸேனா 48 ரன்கள் எடுத்தார்கள். தெ.ஆ. ஏ தரப்பில் முல்டர், பீடிட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி, 2-ம் நாளின் முடிவில் 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. கேப்டன் மார்க்ரம் 83, முல்டர் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்கள். அந்த அணிக்கு 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், 258 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்திய ஏ அணித் தரப்பில் நதீம், குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com