உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அரையிறுதிக்கு இந்தியாவின் அமித் பங்கால், மணிஷ் கெளஷிக் தகுதி பெற்றுள்ளனர்.
ஆசிய சாம்பியன் அமித் பங்கால் 52 கிலோ பிரிவில் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் பிலிப்பைன்ஸின் கார்லோ பாலத்தை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். ஏற்கெனவே ஜகார்த்தா ஆசியப் போட்டி அரையிறுதியிலும் கார்லோவை வீழ்த்தியிருந்தார் அமித்.
மற்றொரு ஆட்டத்தில் 63 கிலோ பிரிவில் இந்தியாவின் மணிஷ் கெளஷிக் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் பிரேசில் வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
இதன் மூலம் இருவரும் குறைந்தது ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். மற்றொரு வீரரான சஞ்சித் 91 கிலோ பிரிவில் 1-4 என டோரஸிடம் தோல்வியுற்று வெளியேறினார்.