தோனியும் ரோஹித் சர்மாவும் அணியில் இருப்பதால் தான் கோலியால் வெற்றிகரமான கேப்டனாக இருக்க முடிகிறது: கம்பீர்

தோனியும் ரோஹித் சர்மாவும் அணியில் இருப்பதால் தான் கோலியால் வெற்றிகரமான கேப்டனாக இருக்க முடிகிறது: கம்பீர்

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி வெற்றிகரமான கேப்டனாக இருப்பதற்குக் காரணம், இந்திய அணியில் தோனி, ரோஹித் சர்மா என... 

சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி வெற்றிகரமான கேப்டனாக இருப்பதற்குக் காரணம், இந்திய அணியில் தோனி, ரோஹித் சர்மா என இரு வெற்றிகரமான கேப்டன்கள் இருப்பதால் தான் என முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் கம்பீர் கூறியதாவது:

ஒரு கேப்டனாக இன்னும் கோலி நீண்டதூரம் செல்லவேண்டும். உலகக் கோப்பை அவருக்கு நல்லவிதமாக அமைந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் அவரால் வெற்றிகரமான கேப்டனாக இருக்கமுடிவதற்குக் காரணம், இந்திய அணியில் தோனி, ரோஹித் சர்மா என இரு வெற்றிகரமான கேப்டன்கள் இருப்பதால் தான். 

ஐபிஎல் போன்ற போட்டிகளில் உங்களுடைய தலைமைப்பண்பு சோதிக்கப்படும். ஏனெனில் அப்போதுதான் இதர வீரர்கள் உங்களுக்கு ஆதரவளிக்கமாட்டார்கள். நான் மிகவும் உண்மையாக இருக்கிறேன், இதைச் சொல்லும்போது. மும்பை இந்தியன்ஸுக்காக ரோஹித் சர்மாவும் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக தோனியும் சாதித்துள்ளதைப் பாருங்கள். அத்துடன் ஆர்சியின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் உங்களுக்கே தெரியும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com