உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கால்

​உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் இந்திய வீரர் அமித் பங்கால் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். 
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்றார் இந்திய வீரர் அமித் பங்கால்


உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் இந்திய வீரர் அமித் பங்கால் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். 

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 52 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்று இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில், ஆசிய சாம்பியனான 23 வயது இந்திய வீரர் அமித் பங்கால் உஸ்பெகிஸ்தான் நாட்டின் ஷகோபிதின் ஸோய்ரோவை எதிர்கொண்டார். இதில், ஸோய்ரோவ் இந்திய வீரர் அமித் பங்காலை 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். இதில் தோல்வியடைந்த அமித் பங்கால் வெள்ளிப்பதக்கம் வென்றார். 

இதன்மூலம், உலக குத்துச்சண்டையில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அமித் பங்கால் பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com