விமானம் காலதாமதம்: விரக்தியில் பிளெஸ்ஸிஸ்

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் ஃபாப் டூ பிளெஸ்ஸிஸ், பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் காலதாமதம் ஆனதால் கடும் விரக்தியில் ஆழ்ந்தார்.
விமானம் காலதாமதம்: விரக்தியில் பிளெஸ்ஸிஸ்

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் ஃபாப் டூ பிளெஸ்ஸிஸ், பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் காலதாமதம் ஆனதால் கடும் விரக்தியில் ஆழ்ந்தார்.
இந்தியாவில் தென்னாப்பிரிக்க அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. குவின்டன் டி காக் தலைமையிலான அணி இந்தியாவுக்கு எதிராக டி20 ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
இதையடுத்து, 3 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியாவுடன் தென்னாப்பிரிக்கா விளையாடவுள்ளது.
இதற்காக கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் இந்தியா புறப்பட்டார்.
பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் காலதாமதமானதால் துபைக்கு 4 மணி நேரம் தாமதமாக அவர் வந்தார். இந்தக் தாமதத்தால் இந்தியாவுக்கு அவர் வர முன்பதிவு செய்யப்பட்டிருந்த விமானம் புறப்பட்டுவிட்டது.
10 மணி நேரத்துக்கு பிறகே அடுத்த விமானம் என்று விரக்தியுடன் சுட்டுரையில் வேதனை தெரிவித்துள்ளார் பிளெஸ்ஸிஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com